உன் உதடுகள் கோபத்தில் படும் பாட்டினை கண்டபொது
என் மனதிற்குள் பூகம்பம் வந்தது !!!
உன் ஈரப்பதமுள்ள கண்களைக்காணமல்
என் நாட்கள் பாலைவனமானது
என்னிடம் பேசாமல் வேறொரு பெண்ணிடம்
பேசும்போது மனதிற்குள் எரிமலை வெடித்தது
எங்கே சென்றாய் அமைதியாய்
என் மனதுள் சுனாமியை ஏற்படுத்திவிட்டு ?
அத்தோடு நீ நிறுத்தி விடவில்லை
அதன் அதிர்ச்சியிலிருந்து மீழ வாய்ப்பில்லாமல்
என் மனதை முழுதுமாக அடித்து சென்று விட்டாய்......
முற்றும் தொலைத்த அகதியாய் அலைகிறேன்
உன் மனதினுள் அடைக்கலம் தருவாயோ?


