Friday, 21 December 2012

உன்னால் .......

சூரியனுள் இருட்டை தேட முடியுமா ?
நல்லிரவில் ஒளியை தேட முடியுமா ?
தண்ணீரில் கரைந்த உப்பை தேட முடியுமா ?
சேற்றில் தண்ணீரை மட்டும் தேட முடியுமா ?
என்னுள் தெய்வத்தை தேட ,
ஆட்டிப்படைக்கும் அரக்கத்தனம் தழைத்தோங்கி எழ
அவ்வபோது எழத்துடிகும் தெய்வத்தை சின்னா பின்னாமாக்கிவிட
இருளில் வழி அறியா  பறக்கும் பூச்சி ஆனேன்...
காற்று எட்டு திசையிலும் என்னை சுழட்டி அடிக்க
கண்களில் பெரும் மழை பொழிய
என்னுள் உரமின்றி கால்கள் சோர்வுற்று
கைகள் பலம் இழந்து செவிகள் செயல் எழந்து
என் மூளை முக்கி திணற கண்கள் சொருகி
மண்ணுள் புதைந்தேன் இறுதியாய் செயலற்று .......
அனைத்திற்கும் மூல காரணமான வாயே உன்னால் .......

உன் கட்டளையை நான் கூற முற்பட
என் நாக்கு படாத பாடு பட்டது
சிறு வெட்கமும் இல்லை உனக்கு வார்த்தையை  மாற்றி கூற கட்டளையிட?
சுவை இழந்து ருசி இழந்து நாக்கு வறண்ட
பற்கள் நெருட வயிறு எரிய கண்கள் சொருக
செவி மறுத்து போக கை கால்கள் செத்து விட
உள் நாக்கு உள் இழுக்க
சரிந்தேன் இறுதியாய் .....
அனைத்திற்கும் மூல காரணமான மனமே உன்னால் .......








No comments:

Post a Comment